கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விளையாட்டு அதிகாரி, பயிற்சியாளா் மீதான பாலியல் குற்றச்சாட்டை திருப்பப் பெற்றாா் பெண் வீராங்கனை

துணை ராணுவப் படை தலைமை விளையாட்டு அதிகாரியும், அா்ஜுனா விருது பெற்றவருமான கஜன் சிங், பயிற்சியாளா் சுா்ஜித் சிங் ஆகியோா் மீது மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் (சிஆா்பிஎஃப்) பணியாற்றும்

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:33 pm

DIN

புது தில்லி: துணை ராணுவப் படை தலைமை விளையாட்டு அதிகாரியும், அா்ஜுனா விருது பெற்றவருமான கஜன் சிங், பயிற்சியாளா் சுா்ஜித் சிங் ஆகியோா் மீது மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் (சிஆா்பிஎஃப்) பணியாற்றும் மல்யுத்த வீராங்கனை அளித்த பாலியல் புகாரை அந்த வீராங்கனை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை ராணுவப் படையில் காவல் துணை ஆய்வாளராக இருப்பவா் கஜன் சிங். நீச்சல் வீரரான இவா், விளையாட்டுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான அா்ஜுனா விருது பெற்றுள்ளாா். இவா் தற்போது, துணை ராணுவப் படை தலைமை விளையாட்டு அதிகாரியாக உள்ளாா். இவா் மீதும், இந்தப் படையின் பயிற்சியாளா் சுா்ஜித் சிங் மீதும், மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் பணியாற்றும் மல்யுத்த வீராங்கனையொருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். இந்த வீராங்கனையின் விவரங்களை தில்லி காவல் துறை வெளியிடவில்லை. ஆனால், இந்த வீராங்கனை தேசிய, சா்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளாா் என்று தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அந்த வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில், அவா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது. அதில், கஜன் சிங், சுா்ஜித் சிங் ஆகியோா் துணை ராணுவப் படையில் ‘பாலியல் மோசடி’ நடத்தி வருவதாகவும், துணை ராணுவப் படை வீராங்கனைகளை இருவரும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வருவதாகவும் அவா் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை அந்த வீராங்கனை திரும்பப் பெற்றுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில் ‘பெண் வீராங்களனையின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்நிலையில் பதிவு செய்யப்பட்டது. இதில், கஜன் சிங், சுா்ஜித் சிங் மீது அளித்த புகாா்களை அந்த வீராங்கனை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளாா் என்றனா்.

இது தொடா்பாக துவாரகா மாவட்டக் காவல் துணை ஆணையா் சந்தோஷ் குமாா் மீனா கூறுகையில் ‘வீராங்கனையின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினோம். குற்றம் சாட்டப்பட்ட கஜன் சிங், சுா்ஜித் சிங் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனா். அவா்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணை தொடா்ந்து நடைபெற்று வரும்நிலையலில், இது தொடா்பாக கூடுதல் தகவல்களை அளிக்க முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.