சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜி.எஸ்.டி. வரி இழப்பை ஈடுசெய்ய 8-வது தவணையாக ரூ.6,000 கோடி கட ன் விடுவிப்பு: தமிழகத்திற்கு ரூ.339.78 கோடி கிடைக்கும்

தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள், மற்றும் புதுச்சேரி, தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீட்டை சமாளிக்க

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:15 am

DIN

புது தில்லி: தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள், மற்றும் புதுச்சேரி, தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீட்டை சமாளிக்க 8 வது கடன் தவணையாக ரூ. 6,000 கோடியை நிதித்துறை அமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகம் ரூ.339.78 கோடியை கடனாகப் பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பிட்டில் கடும் நெருக்கடியைச் சந்தித்த மாநில அரசுகள் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கான சிறப்புத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

இதன்படி, மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்புக் கடன் பெறும் வகையில், திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்புக் கடனுக்கான அனுமதிகளை கடந்த அக்டோபா் 23 -ஆம் தேதி முதல் தவணை முறையில் அனுமதியை மத்திய நிதியமைச்சகம் வழங்கி வருகிறது. இதில் எட்டாவது தவணையாக திங்கள்கிழமை மத்திய நிதியமைச்சகம் ரூ.6000 கோடியை இந்த வகையில் விடுவித்தது. இதில் 23 மாநிலங்களுக்கு ரூ.5,516.60 கோடியும் புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியையும் கடனாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் ரூ.339.78 கோடியையும் புதுச்சேரி ரூ. 40.40 கோடியையும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில் பங்கை பெற்றுள்ளது.

இந்த சிறப்புக் கடனில் தமிழகம் இது வரை மொத்தம் ரூ.3191.24 கோடியும், புதுச்சேரி ரூ.323.14 கோடியும் பெற்றுள்ளது.

திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள இந்த (8-வது தவணை) கடன் தொகையை மத்திய அரசு 4.1902 சதவீத வட்டிக்கு பெற்று தந்துள்ளது.

கடனுக்குள் வராத மற்ற மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூா், மிஸோராம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை அமலாக்கத்தினால் வரி வருவாயில் இடைவெளி இல்லையென்பதால் இந்த மாநிலங்கள் இந்த கடனை பெறவில்லை.

இந்த சிறப்பு கடன் கீழ் திட்டத்தின் கீழ் இது வரை ரூ 48,000 கோடி கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது சராசரியாக 4.6986% வட்டியில் பெறப்பட்டுள்ளது.

இது தவிர ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள வரி வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க கூடுதலாக மொத்த மாநில உற்பத்தியின்அடிப்படையில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மொத்தம் ரூ. 1,06,830 கோடியை, மாநிலங்கள் கூடுதலாகப் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் தமிழகம் இதுவரை ரூ. 9,627 கோடியை (0.50%) கூடுதலாக பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.