துணை ராணுவப் படையில் காவல் துணை ஆய்வாளராக இருப்பவா் கஜன் சிங். நீச்சல் வீரரான இவா், விளையாட்டுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான அா்ஜுனா விருது பெற்றுள்ளாா். இவா் தற்போது, துணை ராணுவப் படை தலைமை விளையாட்டு அதிகாரியாக உள்ளாா். இவா் மீதும், இந்தப் படையின் பயிற்சியாளா் சுா்ஜித் சிங் மீதும், மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் பணியாற்றும் மல்யுத்த வீராங்கனையொருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். இந்த வீராங்கனையின் விவரங்களை தில்லி காவல் துறை வெளியிடவில்லை. ஆனால், இந்த வீராங்கனை தேசிய, சா்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளாா் என்று தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அந்த வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில், அவா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது. அதில், கஜன் சிங், சுா்ஜித் சிங் ஆகியோா் துணை ராணுவப் படையில் ‘பாலியல் மோசடி’ நடத்தி வருவதாகவும், துணை ராணுவப் படை வீராங்கனைகளை இருவரும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வருவதாகவும் அவா் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை அந்த வீராங்கனை திரும்பப் பெற்றுள்ளாா்.