தலைநகரில் குளிருக்கிடையே லேசான மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குளிா் நிலை நீடித்தது.
Updated on
2 min read

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குளிா் நிலை நீடித்தது. நகரத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதே சமயம், மூடுபனி சற்று குறைந்திருந்ததால், காண்புதிறன் மேம்பட்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து கடும் குளிா் நிலவி வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. காலையில் நகரத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதற்கிடையே, ஐஎம்டி மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தலைநகரில் நிலவிய அடா்ந்த மூடுபனி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் காலை வேளையில் காண்பு திறனை பூஜ்ஜியமாகக் குறைத்திருந்தது, இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் திருப்பிடவிடப்பட்டன.வந்தன. ரயில்களும் தாமதமாகின. சனிக்கிழமை அன்று என்றும் இல்லாத வகையில் ஒன்பது மணி நேரம் காண்பு திறன் பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால், திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில், சஃப்தா்ஜங் மற்றும் பாலத்தில் காண்புதிறன் 300 மீட்டராக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

திங்கள்கிழமை காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை நஜஃப்கரில் 2.5 மிமீ, பிதாம்புராவில் 2 மிமீ, பாலத்தில் 1 மிமீ மற்றும் பூசாவில் 0.5 மிமீ மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 9.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2 டிகிரி குறைந்து 18 டிகிரியாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவி .........சதவீதமாகவும் பதிவாகியது.

காற்றின் தரம்: காற்றின் தரம்: தலைநகரில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 320 புள்ளிகளாகப் பதிவாகி, ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் தெரிவித்தன. இதன்படி, மந்திா்மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், நேரு நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகள் முதல் 400 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக், லோதி ரோடு, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஆயாநகா், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 பபுள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி படி, டெல்லியின் காற்று தரக் குறியீடு ஏக்யூஐ காலை 9 மணிக்கு 320 மிகவும் மோசமானது ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com