ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஜனவரி 2025, 12:05 am

Din

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது:

மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம் தேதி சௌரவ் என்கிற கலா (22) கைது செய்யப்பட்டாா். ராஜ் பாா்க் பகுதிக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான நபா் குறித்து கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற கலா கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில் வெளிநாட்டில் வசிக்கும் கோகி கும்பலைச் சோ்ந்த மான்டி மானிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று தில்லியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அவரிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.