முன்னாள் நீதிபதி ஸோரா சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மிக் கட்சியில் சேர்ந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஸோரா சிங். இவர் ஓய்வு பெற்ற நீதிபதியாவார். இவர் தில்லியில் திங்கள்கிழமை முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக மணீஷ் சிசோடியா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், " பஞ்சாப் நீதித் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றிய ஸோரா சிங், ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். தனது பதவிக் காலத்தில் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் அவர் பணியாற்றியுள்ளார். பஞ்சாப் மக்கள் அவரின் அறிவு, அனுபவத்தால் பயன்பெறுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸோரா சிங்கை கட்சிக்கு வரவேற்று கேஜரிவால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் "நீங்கள் (ஸோரா சிங்) கட்சியில் இணைந்தது ஆம் ஆத்மியின் அதிர்ஷ்டம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஸோரா சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. தில்லி அரசு போல பஞ்சாப் அரசும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.
இந்நிகழ்வின் போது, ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ ஜெய் கிஷன் மீண்டும் ஆம் ஆத்மியில் இணைந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








