தில்லியில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
இது குறித்து பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி வியாழக்கிழமை கூறியதாவது: புதிய மின்கட்டண முறையில் மின் கட்டண மீட்டர்களுக்கான நிலையான கட்டண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மானிய முறையில் மின்சாரம் பயன்படுத்தும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். புதிய கட்டணத்தின்படி, 150 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கவுள்ளது. 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் குறையவுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் 150 யூனிட் வரையே மின்சாரத்தை பயன்படுத்துவர். அவர்கள் 400 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்த வாய்ப்பில்லை. எனவே, இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இது ஒரு ஏமாற்று வேலையாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கேஜரிவால், மக்களை ஏமாற்றி விட்டார். தில்லி அரசு வழங்கும் மானியத் தொகையால் மின் உற்பத்தி நிறுவனங்களே லாபமடைகின்றன. மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.6,000 கோடி மானியத் தொகையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க நினைக்கிறாா்கள்: சீமான் குற்றச்சாட்டு

பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

