தில்லியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் தேசிய பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
மத்திய அரசின் இளைஞர் நலன் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திர சங்கதன் அமைப்பு (என்ஓய்கேஎஸ்) சார்பில் இப்போட்டி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், நூலகத்தில் நடைபெற உள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தில் அதிக இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலும், தேசிய கட்டமைப்பில் முழு மனதுடன் பங்கேற்பதற்காக இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை பலப்படுத்தவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும், தலைமைப் பண்புகளுடன்கூடிய இளையோரை அடையாளம் காணவும், அதிகாரமளித்தல் மற்றும் முழு வளர்ச்சியில் அவர்களுக்கான சிறந்த தொடர்புத் திறனை கண்டறியவும் இந்நிகழ்ச்சியை தேசிய யுவ கேந்திரா சங்கதன் நடத்துகிறது. கடந்த 2015-16-இல் இருந்து இந்தப் போட்டியை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பங்கேற்று வருவதாகத நேரு யுவ கேந்திரா அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


