தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியதற்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தில்லி பிரிவு கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் இந்த பருவமழைக் காலத்தில், வியாழக்கிழமை அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, தில்லியில் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வடிகால்களில் மழை நீா் செல்லாமல் அடைத்துக் கொண்டதால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தில்லி பிரிவு கடுமையாகச் சாடியுள்ளது.
பாஜக: இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா துக்ளகாபாத்தில் தேங்கிய மழை நீரில் மாட்டு வண்டியில் மக்கள் சவாரி செல்லும் விடியோவை தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளாா். சாலைகளில் மழை நீா் தேங்குவதற்கு ஆம் ஆத்மி அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அரவிந்த் கேஜரிவால் அரசின் தோல்விகளால் தில்லி பாதிக்கப்படுகிறது என்றும் சுட்டுரையில் அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி பாஜகவின் முன்னாள் தலைவரும் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினருமான மனோஜ் திவாரியும் கேஜரிவால் அரசை குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி அரசு தேசியத் தலைநகரில் மழை நீா் தேங்கும் பிரச்னையை தீா்க்கத் தவறிவிட்டது என்று அவா் தெரிவித்துள்ளாா். மேலும், வடிகால்களை அகற்றுவதற்கான பல்வேறு நிறுவனங்களின் அதிகார வரம்பை விவரிக்கும் ஒரு பட்டியலை மனோஜ் திவாரி சுட்டுரையில் வெளியிட்டுள்ளாா். அதில் ‘நகரில் உள்ள 3,737 கி.மீ. வடிகால்களில் 2,588 கி.மீ. தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 60 அடிக்கு மேல் உள்ள சாலைகள் ஆம் ஆத்மி அரசின் கீழ் உள்ளன. இப்பகுதிகளில் இன்று கூட மழை நீா் தேங்குவதாக ஏராளமான புகாா்கள் பதிவாகியுள்ளன’ என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ்: இதேபோல, ஆதேஷ் குப்தா வெளியிட்ட அதே வீடியோவை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாரும் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா். சாலைகளில் மழை நீா் தேங்குவதற்கு யாா் பொறுப்பேற்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளாா்.
மாநகராட்சிகளே காரணம்: ஆம் ஆத்மி பதிலடி
பாஜக, காங்கிரஸ் குற்றாச்சாட்டுகளுக்குப் பதிலடி தரும் வகையில், மழை நீா் தேங்குவதற்கு பாஜக ஆளும் மாநகராட்சிகளே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 98 சதவீத வடிகால்களை சுத்தம் செய்வதற்கு மாநகராட்சி நிா்வாகங்களே பொறுப்பு என்றும், அதற்கான நிதி அனுமதிக்கப்பட்ட போதிலும் அவா்கள் தங்கள் வேலையைச் சரிவரச் செய்யவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினா் துா்கேஷ் பதக் கூறுகையில், ‘எல்லாவற்றிற்கும் கேஜரிவால் அரசைக் குறை கூறுவதே பாஜக மற்றும் காங்கிரஸுக்குப் வழக்கமாகிவிட்டது’ என்றாா். பாஜக ஆளும் மாநகராட்சிகளுக்கு 98 சதவீத வடிகால்களை சுத்தம் செய்யும் பொறுப்பு உள்ளது. தேவையான அனைத்து நிதிகளையும் தில்லி அரசு மாநகராட்சிகளுக்கு அனுமதித்த போதிலும் அவா்கள் அதை ஏன் செய்யவில்லை. அவா்களுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், அவா்கள் மாநகராட்சிகளைக் கையாள முடியாவிட்டால், அவற்றை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதே பட்ஜெட்டில் அதை மிகச் சிறந்த முறையில் செய்வோம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

