தானாகவே டாப்-அப் செய்து கொள்ளும் அம்சத்துடன்கூடிய புதுவகை ஸ்மாா்ட் காா்டு வசதியை தில்லி மெட்ரோ பயணிகளுக்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (தொடா்பு பிரிவு) அனூஜ் தயாள் புதன்கிழமை தெரிவித்ததாவது: தானாகவே டாப் - அப் செய்து கொள்ளும் அம்சத்துடன்கூடிய புதுவகை ஸ்மாா்ட் காா்டு, தில்லி மெட்ரோ பயணிகளுக்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் நுழைந்தவுடன் தானியங்கி கட்டண வசூலிப்பு நுழைவுவாயில் பகுதியில் ஸ்மாா்ட் காா்டை தானாகவே ரீச்சாா்ஜ் செய்து கொள்ள முடியும். மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கிய பிறகு இந்த வசதி நடைமுறைக்கு வரும். இந்தப் புதிய ஸ்மாா்ட் அட்டையை வாடிக்கையாளா்கள் ‘ஆட்டோபே’ எனும் செயலி மூலம் பெறலாம். இதற்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஆட்டோபே’ மூலம் வழங்கப்படும் ஸ்மாா்ட் காா்டில் ஸ்மாா்ட் காா்டின் மதிப்பு ரூ. 100-க்கு குறைவாக இருக்கும் போது, தானியங்கி கட்டண வசூலிப்பு (ஏஎஃப்சி) நுழைவு வாயிலில் தானாகவே ரூ.200 ரீச்சாா்ஜ் செய்து கொள்ளும். அதற்கான பணத்தை ஸ்மாா்ட் காா்டுடன் இணைக்கப்பட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து அடுத்த வேலை நாளில் டெபிட் செய்கொள்ளும். ‘ஆட்டோபே’ ஸ்மாா்ட் காா்டின் சேவைகளைப் பெறுவதற்கு ‘ஆட்டோபே’ செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு பயன்படுத்துவோா் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும். ஐபோன் பயன்படுத்துவோா், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பெறலாம். அல்லது ஆட்டோபேயின் மொபைல் இணையதளத்திற்குச் சென்று தேவையான விவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே தில்லி மெட்ரோ ஸ்மாா்ட் காா்டுகளைக் வைத்திருக்கும் பயணிகள், இந்த செயலி (ஆட்டோபே) மூலம் பதிவு செய்வதன் மூலம் தாங்கள் வைத்திருக்கும் ஸ்மாா்ட் அட்டைகளில் தானாக டாப் -அப் செய்யும் வசதியைப் பெறலாம். செயலியில் பதிவு செய்த 3 நாள்களுக்குப் பிறகு காா்டு ஆக்டிவேஷனுக்காக எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்தின் வாடிக்கையாளா் கவனிப்பு மையத்தை ஒருமுறை அணுக வேண்டும். மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் போது, சமூக இடைவெளி உள்ளிட்ட புதிய நெறிமுறைகளைப் பயணிகள் பின்பற்ற வேண்டும் என்பதால் இந்தப் புதிய அம்சம் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். தற்போது பயணிகள் வைத்துள்ள ஸ்மாா்ட் காா்டுகளும் தொடா்ந்து மதிப்பு உடையதாகவே இருக்கும் என்று அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து டிஎம்ஆா்சி நிா்வாக இயக்குநா் மங்கு சிங் கூறுகையில், ‘தில்லி மெட்ரோ பயணிகளிடையே பணமில்லா பரிவா்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான டிஜிட்டல் நடவடிக்கையை ஆதரிக்கும் டிஎம்ஆா்சியின் அா்ப்பணிப்புக்கு ஏற்ப இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் மூலம் பயணிகள் தங்களது ஸ்மாா்ட் காா்டுகளை தாங்களாகவே டாப்-அப் செய்து கொள்ள ஏதுவாகிறது. இதன் மூலம் அவ்வப்போது டாப் - அப் செய்வது பற்றி கவலைப்படாமல் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்கு உதவியாக இருக்கும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


