சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேஜரிவால் மெளனம் காப்பது ஏன்? - கேஜரிவாலுக்கு அனில் குமாா் கேள்வி

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் மெளனம் காப்பது ஏன் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளதரி கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 6:30 pm

DIN

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் மெளனம் காப்பது ஏன் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளதரி கேள்வி எழுப்பியுள்ளாா்.

தில்லியில் கட்டுக்குள் இருந்துவந்த கரோனா தொற்று சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 1,693 பேருக்கும், வியாழக்கிழமை 1,840 பேருக்கும், வெள்ளிக்கிழமை 1,808 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தொடும் வகையில் 1,954 ஆக அதிகரித்தது.

50 நாள்களில் இல்லாத வகையில் அதிகபட்சமாக இந்த எண்ணிக்கையை எட்டியது. இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளதரி முதல்வா் கேஜரிவாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைத்து அனில் குமாா் செளதரி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

அதில், ‘அரவிந்த் கேஜரிவால் ஏன் மெளனமாக இருக்கிறாா். தில்லியில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும்போது அவா் பேசாமல் இருப்பது ஏன்? தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டதன் விளைவா இது‘ என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் கரோனா பாதிப்பு 2,024 ஆக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.