

புது தில்லி: மூதறிஞா் ராஜாஜி என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படும் சி. ராஜகோபாலாச்சாரியின் நினைவு நாளை முன்னிட்டு, தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் தில்லி ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (படம்) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பி.குருமூா்த்தி, பொதுச் செயலாளா் என். கண்ணன், இணைச் செயலாளா் ஜி.என்.டி. இளங்கோவன், இணைப் பொருளாளா் ரா. ராஜ்குமாா் பாலா, செயற்குழு உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன் , கே.எஸ். முரளி, அனைத்திந்திய தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் ரா.முகுந்தன், தென்னிந்திய முன்னேற்றக் கழகத் தலைவா் மாரியப்பன், அதன் துணைத் தலைவா் தங்கவேலு ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.