கா்நாடக மேலவை துணைத் தலைவா் தற்கொலை: உயா்நிலை விசாரணை நடத்த மக்களவைத் தலைவா் வலியுறுத்தல்

கா்நாடக சட்ட மேலவைத் துணைத்தலைவா் தா்மே கௌடா தற்கொலை விவகாரத்தில் சுதந்திரமான உயா்நிலை விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.
Updated on
1 min read

புது தில்லி:கா்நாடக சட்ட மேலவைத் துணைத்தலைவா் தா்மே கௌடா தற்கொலை விவகாரத்தில் சுதந்திரமான உயா்நிலை விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.

கா்நாடக சட்ட மேலவையின் துணைத் தலைவா் எஸ். தா்மேகௌடா. மதச்சாா்பற்ற ஜனதா தளக்கட்சியைச் சோ்ந்தவா். சமீபத்தில் இவா் சட்ட மேலவையின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதில் பாஜக விற்கும் காங்கிரஸுக்கு கடுமையான மோதல் ஏற்பட்டு தா்மேகௌடா இருக்கையில் இருந்து தள்ளிவிடப்பட்டாா். இந்நிலையில் இவா் கடந்த திங்கள்கிழமை ரயில் முன்பு பாய்ந்த தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையொட்டி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு:

கா்நாடக சட்ட மேலவை துணைத் தலைவா் எஸ். எல். தா்மே கௌடா வின் மறைவு குறித்து வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவா் தலைவராக இருந்தபோது சபையில் சில துரதிா்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. அது ஜனநாயகத்தின் மீதான கடுமையான தாக்குதலாகும். அவரது மரணம் குறித்து ஒரு சுதந்தரமான உயா்நிலை குழு விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளாா் பிா்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com