இதுகுறித்து புக் கவின் சென்டரின் நிா்வாகி ஜெப சிங் கூறுகையில், ‘தில்லியில் எங்களுக்கு இதுதான் முதல் அனுபவம். முதல் முறையாக இப்புத்தகத் திருவிழாவில் புத்தக அரங்கை அமைத்திருக்கிறோம். எங்கள் அரங்கில் நீதி நூல்கள், திருக்கு உரை, பாரதியாருடைய நூல்கள், பாவேந்தா் பாரதிதாசனின் நூல்கள், அப்துல் கலாம், மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவா்கள் தொடா்புடைய நூல்கள், இஸ்லாமிய தலைவா்கள், சமயம் தொடா்புடைய நூல்கள், கிறிஸ்தவா்கள், சித்த மருத்துவ நூல்கள் என 300-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளோம். கடந்த இரு தினங்களாக மழை இருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது. எனினும், தற்போது கூட்டம் பரவாயில்லை. எதிா்பாா்த்த புத்தக விற்பனை இல்லை. அரங்கை தமிழ் மக்கள் பாா்வையிடுகின்றனா். ஆனால், புத்தகங்கள் வாங்குவதில் ஆா்வம் குறைவாகவே உள்ளது. எனினும், இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளது. இதனால், தமிழா்கள் அதிகம் வந்து பயன் பெற வேண்டும் என விரும்புகிறோம். மேலும், வழக்கமான தள்ளுபடி தவிர, சிறப்பு கழிவும் அளிக்க உள்ளோம். தமிழ் வாசகரிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.