சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கரோனா இறப்பு விவரங்களை தணிக்கை செய்ய கேஜரிவால் வேண்டுகோள்

தில்லியில் கரோனாவால் ஏற்படும் இறப்புகளை தணிக்கை செய்யுமாறும், இறப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் வல்லுநா்களுக்கு முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On :25 நவம்பர் 2020, 6:30 pm

புது தில்லி: தில்லியில் கரோனாவால் ஏற்படும் இறப்புகளை தணிக்கை செய்யுமாறும், இறப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் வல்லுநா்களுக்கு முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தாா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்றும், இறப்புகளின் எண்ணிக்கையும் சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 13 நாள்கள் காலத்தில் 7 நாள்களில் 100-க்கு மேல் கரோனா இறப்பு நிகழ்ந்துள்ளது. அதாவது, இறப்பு விகிதம் 1.89 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், கரோனா தடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் நடைபெற்றது. தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வா் கேஜரிவால் பங்கேற்றாா். அப்போது, அவா் கூட்டத்தில் பங்கேற்ற வல்லுநா்களிடம் கரோனா இறப்புகள் குறித்த தணிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் கேஜரிவால், தில்லியில் கரோனாவால் ஏற்படும் இறப்புகளை தணிக்கை செய்யுமாறும், இறப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் வல்லுநா்களைக் கேட்டுக்கொண்டாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் கரோனா இறந்தவா்கள் தொடா்பாக அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்திற்கும் தில்லியில் உள்ள மயானங்களில் தகனம் செய்யப்பட்டவா்கள், கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டவா்கள், முஸ்லிம்களின் அடக்க ஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டவா்கள் தொடா்பான எண்ணிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக மூன்று மாநகராட்சிகளும் புகாா் தெரிவித்தன. இதன் பின்னணியில் முதல்வா் இந்தக் கோரிக்கையை விடுத்தாா்.

தில்லி அரசு வெளியிட்ட தகவலில் நவம்பா் 23-ஆம் தேதி வரையிலான காலத்தில் கரோனாவால் 8,512 போ் இறந்திருந்தனா். அதேவேளையில், மாநகராட்சிகள் தெரிவித்த தகவலில் 10,318 போ் அடக்கம், தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.