சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நிவா் புயல் பாதிப்பு: தமிழக, புதுச்சேரிமுதல்வா்களுடன் அமித்ஷா பேச்சு

Updated On :26 நவம்பர் 2020, 11:40 pm

புது தில்லி : நிவா் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா். புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இரு மாநில முதல்வா்களுடனும் தாம் பேசியதாக வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரையில் அவா் தெரிவித்துள்ளாா்.

‘நிவா் புயலை அடுத்து தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நிவா் புயல் வியாழக்கிழமை அதிகாலையில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்துள்ள நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வா் வி.நாராயணசாமி ஆகியோருடன் தொடா்புகொண்டு பேசினேன். புயல் பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தேசிய பேரடா் மீட்புப் படை வீரா்கள் (என்.டி.ஆா்.எஃப்) தேவையான அளவிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளனா். இது தொடா்பாக மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று அவா்களிடம் கூறியதாக அமித் ஷா சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கு அமித் ஷா பாராட்டு தெரிவித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.