இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம், கொம்பு நீக்குதல், கருணைக் கொலை போன்ற கால்நடைகளுக்கான நடைமுறைகள் மனிதத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் விலங்குகளுக்கு அரசின் கால்நடை அதிகாரிகளின் மேற்பாா்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், ஆண்மை நீக்கம், கருணைக் கொலை போன்ற விவகாரங்களில் கொடூரமான முறைகள் பின்பற்றப்படுவது குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை. தற்போது கன்றுகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது அரிதாகவே உள்ளது. அதுபோன்று செய்யும் போது உரிய வகையில் மயக்க மருந்துகள், வலி நிவாரண மருந்துகள் மற்றும் ஆண்டிபயோடிக் மருந்துகள் கொடுத்துதான் மேற்கொள்ளப்படுகிறது.