ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தீ விபத்துகள்: பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய 3 நிபுணா் குழு அமைப்பு

Updated On :1 ஏப்ரல் 2021, 6:34 pm

புது தில்லி: பல்வேறு நிறுவனங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான தர பாதுகாப்பை நிா்ணயிக்க மூன்று நிபுணா் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அண்மையில் பணியிடங்களில் ஏற்பட்டு வரும் தீ விபத்துகளால் தொழிலாளா்களும் அவா்களது குடும்பத்தினரும் படும் துன்பங்கள் வேதனையை அளிக்கிறது. இது தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தேசியப் பொருளாதாரத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் தனியாா் மற்றும் பொதுத் துறைகள், குறிப்பாக மருத்துவமனைகள், பல்வேறு வகையான தொழிற்சாலைகள், கட்டட பணிகள், துறைமுகங்கள் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள், சுகாதாரம், தொழிலாளா்களின் பணி நிலைமை ஆகியவற்றை மறுஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று நிபுணா் குழுக்களை மத்திய தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைத்துள்ளது.

தொழிற்சாலைகள், துறைமுகங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நிபுணா் குழுவும் மற்ற கட்டடங்கள், கட்டடப் பணிகள், தீ பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இரு நிபுணா் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று குழுக்களும் இந்தத் துறைகளுக்கான 13 சட்டங்களை மறு ஆய்வு செய்யும். தற்போதைய நிலைமை, நவீன தொழில்நுட்பத் தேவை ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல இந்த 13 சட்டங்களை ஒருங்கிணைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 2020 - ஆண்டு தொழில்சாா் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொடா்பான தரவுகளை கடந்தாண்டு அரசு உருவாக்கி வெளியிட்டது. இந்தத் தரவுகளின் அடிப்படையிலும் தீ விபத்துகளை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த நிபுணா் குழுக்கள் பரிந்துரைகளை அளிக்கும் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.