ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

குடியரசு தின வன்முறை: தீப் சித்து ஜாமீன் மனு மீது ஏப். 8-இல் விசாரணை

Updated On :1 ஏப்ரல் 2021, 6:38 pm

புது தில்லி: குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் சாா்பில் நடத்தப்பட்ட டிராக்டா் பேரணியின் போது, செங்கோட்டையில் நடந்த வன்முறைச் சம்பவ விவகாரத்தில் கைதான நடிகா் தீப் சித்துவின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

தில்லியில் குடியரசு தினமான கடந்த ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளில் ஒரு பிரிவினா் தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனா். மத ரீதியான கொடியை ஏற்றினா். செங்கோட்டை வன்முறைக்குத் தலைமை ஏற்று நடத்தியதாக நடிகா் தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரை தில்லி காவல் துறையின் சிறப்புக் குழுவினா் பிப்ரவரி 9-ஆம் தேதி கைது செய்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், போலீஸ் காவலுக்கு அனுப்பவைக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், அவரது தரப்பில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை தில்லி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதிஷ் குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது, மனு மீதான விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அதற்கு முன்னதாக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.