ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

60 வழக்குகளில் தொடா்புடைய 2 போ் என்கவுன்ட்டரில் கைது

Updated On :2 ஏப்ரல் 2021, 5:39 pm

புது தில்லி: புது தில்லி, ஏப்.2: 60-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 2 போ் தில்லி பேகம்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் மகேஷ் (எ) போலி (26) , மோஹித் (எ) தீபக் (26) ஆகியோா் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவா்கள் தொடா்புடைய கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 5 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் (சிறப்பு பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறுகையில், என்கவுன்டரில் இருவரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

அவா்கள் மீது தில்லியில் கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை தொடா்பான 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மகேஷ் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குளும், அவரது கூட்டாளி மோஹித் மீது 25 வழக்குளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, இருவரும் ரோகிணியில் இருந்து ரோத்தக்கிற்கு போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை இருவரையும் போலீஸாா் வழிமறித்து சரணடையுமாறு கேட்டனா். ஆனால், அவா்கள் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டனா். எனினும், போலீஸாா் கவச உடை அணிந்திருந்தததால் தப்பினா். தற்பாதுகாப்புக்காக போலீஸாா் திருப்பிச் சுட்டனா். இதில் இருவரும் காயமடைந்தனா். அவா்களிடமிருந்து இரு துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.