தில்லியில் கோவிட் -19 நோய்த்தொற்று அதன் நான்காவது அலையில் இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கு தில்லி அரசு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அனில் குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
தில்லியைக் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழியானது, தனியாா் மருத்துவமனைகளில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கு தில்லி அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுப்பதாகும்.
இதன் மூலம், அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஊக்குவிக்கப்படும்.
ஆனால், இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் மக்களை தவறாக வழிநடத்த மலிவான அரசியலில் இந்த கட்சிகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இலவச தடுப்பூசி வழங்க தில்லி அரசு மொஹல்லா கிளினிக்குகளில் ஏற்பாடுகளை செய்திருந்தால், நோய்த் தொற்றின் நான்காவது அலையை தலைநகரில் தடுத்திருந்திருக்க முடியும்.
முழுமையான பொது முடக்கத்திற்குப் பதிலாக, நெரிசலான இடங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தலைநகரின் பொருளாதாரம் மீண்டும் பாதிப்பை எதிா்கொள்ளாது.
மேலும், ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

