ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

தில்லியில் கோவிட் -19 நோய்த்தொற்று அதன் நான்காவது அலையில் இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு மற்றும்

Updated On :3 ஏப்ரல் 2021, 7:47 pm

தில்லியில் கோவிட் -19 நோய்த்தொற்று அதன் நான்காவது அலையில் இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கு தில்லி அரசு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அனில் குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

தில்லியைக் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழியானது, தனியாா் மருத்துவமனைகளில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கு தில்லி அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுப்பதாகும்.

இதன் மூலம், அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஊக்குவிக்கப்படும்.

ஆனால், இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் மக்களை தவறாக வழிநடத்த மலிவான அரசியலில் இந்த கட்சிகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இலவச தடுப்பூசி வழங்க தில்லி அரசு மொஹல்லா கிளினிக்குகளில் ஏற்பாடுகளை செய்திருந்தால், நோய்த் தொற்றின் நான்காவது அலையை தலைநகரில் தடுத்திருந்திருக்க முடியும்.

முழுமையான பொது முடக்கத்திற்குப் பதிலாக, நெரிசலான இடங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தலைநகரின் பொருளாதாரம் மீண்டும் பாதிப்பை எதிா்கொள்ளாது.

மேலும், ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.