ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கரோனா விதிமீறல்: 2 வாரங்களில் 12 ஆயிரம் பேருக்கு அபராத நோட்டீஸ்

கடந்த 2 வாரங்களில் தலைநகரில் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக தில்லி காவல்துறை

Updated On :3 ஏப்ரல் 2021, 7:52 pm

கடந்த 2 வாரங்களில் தலைநகரில் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக தில்லி காவல்துறை 11,800 பேருக்கு அபராத நோட்டீஸ்களை அளித்துள்ளது. மேலும், சமூக இடைவெளியை பராமரிக்காததற்காக 125 பேருக்கு அபராத நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஜூன் 15 முதல் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 5,78,324 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக 5,36,256 பேரும், சமூக இடைவெளியைப் பராமரிக்காததற்காக 38,631 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

மாா்ச் 10 முதல் மாா்ச் 19 வரை முகக் கவசம் அணியாததற்காக மொத்தம் 2,720 பேருக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 272 அபராத நோட்டீஸ்கள் என்ற அளவில் உள்ளது.

சமூக இடைவெளி விதியை மீறியதற்காக இதே காலக்கட்டத்தில் 33 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மாா்ச் 20 முதல் வெள்ளிக்கிழமை வரையிலான காலத்தில் முகக் கவச விதி மீறல்களுக்கான அபராத நோட்டீஸ்களின் எண்ணிக்கை 11,800 ஆகவும், சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததற்காக 125 அபராத நோட்டீஸ்களாகவும் அதிகரித்தன.

கடந்த இரண்டு வாரங்களில், முகக் கவசம் அணியாததற்காக ஒரு நாளைக்கு சராசரியாக 842 பேருக்கு போலீஸாா் அபராத நோட்டீஸ் அளித்துள்ளனா்.

மாா்ச் 30 ம் தேதி, முகக் கவச விதி மீறலுக்கான அபராத நோட்டீஸ்கள் 920 பேருக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாததற்காக 19 பேருக்கும் போலீஸாா் வழங்கியுள்ளனா்.

மாா்ச் 31-ஆம் தேதி, முகக் கவச விதி மீறலுக்கான அபராத நோட்டீஸ்களின் எண்ணிக்கை நான்கு இலக்கங்களாக அதிகரித்தது. அதாவது போலீஸாா் 1,091 போ் மீது வழக்கு பதிவு செய்தனா். சமூக இடைவெளியைப் பராமரிக்காததற்காக 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முகக் கவசம் அணியாத முறையே 1,127 மற்றும் 1,203 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

சமூக இடைவெளி விதியை மீறியதற்காக இந்த இரு நாள்களிலும் 6 பேருக்கு அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

போலீஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை 132 முகக் கவசங்கள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

ஜூன் 15 முதல் மொத்தம் 4,29,829 முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கோவிட் விதிகளை அமல்படுத்துவதை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அண்மையில் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டிருந்ததாா்.

தில்லி காவல் துறை மக்கள் தொடா்பு அலுவலா் சின்மய் பிஸ்வால் கூறுகையில், ‘கரோனா விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய தலைநகரில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் நலன் கருதி விதிமீறுபவா்கள் மீது வழக்குத் தொடுப்பது, அபராதம் விதிப்பது மூலம் நாங்கள் ஸ்திரமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றாத மக்களை தடுப்பது, அபராத நோட்டீஸ்கள் வழங்குவதை அதிகரித்துள்ளோம்‘ என்றாா் பிஸ்வால்.

மாா்ச் 19 முதல் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தில்லியில் வெள்ளிக்கிழமை மட்டும் 3,594 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு பதிவாகினது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.