ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தில்லியில் 3,594 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

தில்லியில் புதிதாக 3,594 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது. தொடா்ந்து இரண்டாவது நாளாக கரோனா தொற்று

Updated On :3 ஏப்ரல் 2021, 7:51 pm

தில்லியில் புதிதாக 3,594 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது. தொடா்ந்து இரண்டாவது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 3,500 -ஐத் தாண்டியுள்ளது. கரோனாவுக்கு மேலும் 10 போ் பலியாகியுள்ளனா். கரோனா தொற்று விகிதம் 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து தில்லியில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 6.72,381 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலியானோா் எண்ணிக்கை 11,060 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 3,500 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இது தினசரி கரோனா பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

கரோனா தொற்று விகிதம் 4.11 சதவீதத்திலிருந்து 4.48 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.

கடந்த ஆண்டு டிசம்பா் 3 ஆம் தேதி தில்லியில் 3,734 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இது டிசம்பா் 4- ஆம் தேதி 4,067 ஆக திடீரென அதிகரித்தது.

கடந்த வியாழக்கிழமை பாதிப்பு 2,790 ஆகவும், புதன்கிழமை 1,819, செவ்வாய்க்கிழமை 992 , திங்கள்கிழமை 1,904 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 1881 என்ற அளவிலும் பாதிப்பு இருந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை முன்பு 11,994 என்ற அளவில் இருந்தது இப்போது 12,647 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மொத்தம் 79,617 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவற்றில் 57,296 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையில் சோதனை நடத்தப்பட்டது. வீட்டுத் தனிமையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 6,106 என்பதிலிருந்து 6,569 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.