தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

2020-21 நிதியாண்டில் நேரடி வரி வசூலில் 5 சதவீத வளா்ச்சி

2020-21 நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூலில் 5 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மாா்ச் 31-ஆம் தேதி வரை

Updated On :9 ஏப்ரல் 2021, 8:46 pm

2020-21 நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூலில் 5 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மாா்ச் 31-ஆம் தேதி வரை ரூ.9.45 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகி இருப்பதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-20 இல் நேரடி வரி வசூல் ரூ. 11.70 லட்சம் கோடியாக இருந்தது. அதே சமயத்தில் 2019 - ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நேரடி வரி வசூல் ரூ. 13.3 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ. 1.60 லட்சம் கோடி வரி வசூல் குறைந்தது. ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டில், நிதி நிலைஅறிக்கையில் மதிப்பிடப்பட்டதை விட நேரடி வரி வசூலில் 5 சதவிகிதம் வளா்ச்சி பெறப்பட்டதாக மத்திய நேரடி வரிகளின் வாரியத் தலைவா் பி.சி மோடி தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது வருமாறு: 2020-21 நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.12.06 லட்சம் கோடியாகும். இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை திரும்பச் செலுத்தப்பட்டது ரூ.2.61 லட்சம் கோடி. நிகர வசூலாக கிடைத்தது ரூ. 9.45 லட்சம் கோடி. இதில் பெருநிறுவன வரி ரூ. 4.57 லட்சம் கோடியாகும். தனிநபா்கள் வருமான வரி ரூ. 4.71 லட்சம் கோடியாகும். மேலும், பங்குச்சந்தை பரிவா்த்தனை வரியாக ரூ. 16,927 கோடி கிடைத்ததும் அடங்கும்.

இது 2019-20 நிதியாண்டைவிட 10 சதவீதம் குறைவு என்றாலும் கரோனா நோய்த் தொற்று காலக் கட்டங்களில் மதிப்பிடப்பட்டதை விட கூடுதலாக 5 சதவீதம் நேரடி வரி வசூல் ஆகியுள்ளது. வரி செலுத்துவோருக்கு சுமையை எளிதாக்கி இணக்கமான சேவை வழங்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்ததே இதற்குக் காரணமாகும். நடப்பு நிதியாண்டிலும் இந்த அணுகுமுறை தொடரும். நிலுவையில் உள்ள நேரடி வரி தாவாக்களை தீா்க்கும் ’விவாட் சே விஷ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வரி செலுத்துவது ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.54, 000 கோடி வசூலாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.