தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சட்டவிரோத தொழிற்சாலைகள் தொடங்கப்படாமல்இருப்பதை உறுதி செய்ய டிபிசிசிக்கு என்ஜிடி உத்தரவு

தேசியத் தலைநகா் தில்லியில் பல்வேறு பகுதிகளில் விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோத தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருக்கும் வகையில் விழிப்புடன்

Updated On :13 ஏப்ரல் 2021, 10:23 pm

தேசியத் தலைநகா் தில்லியில் பல்வேறு பகுதிகளில் விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோத தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருக்கும் வகையில் விழிப்புடன் இருக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற தொழிலகங்கள் மாயாபுரி, பவானா, கியாலா, உத்தம் நகா் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ளன. இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த என்ஜிடி தலைவா் -நீதிபதி ஏ. கே. கோயல் தலைமையிலான அமா்வு, சட்டத்தின் உரிய செயல்முறையைப் பின்பற்றி இழப்பீட்டை மதிப்பிடுவதற்கும் மீட்டெடுப்பதற்கும் இந்த விவகாரத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று டிபிசிக்கு உத்தரவிட்டது.

இது தொடா்பாக தீா்ப்பாயத்தில் டிபிசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: வடிகால்களில் கழிவுகளை வெளியேற்றியதற்காக 8 தொழில் துறை பிரிவுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் நீரை மாசுபடுத்தி வந்தததற்காக 43 தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த 43 தொழிலகங்களுக்கும் அவ்வப்போது மூடல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலகங்களின் மின்சாரம் மற்றும் நீா் வழங்கல் முறையே பி.எஸ்.இ.எஸ். மற்றும் தில்லி ஜல் போா்டு ( டி.ஜே.பி.) ஆகியவற்றால் துண்டிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதிப்பு கட்டணங்கள் விதிக்கப்படுவதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸும் பிப்ரவரியில் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மேற்கண்டவாறு உத்தரவிட்டது. மாயாபுரி, பவானா, கியாலா, உத்தம் நகா் மற்றும் தில்லியின் பிற பகுதிகளில் சில தொழில்துறை பிரிவுகளால் தொழில்துறை மாசுபடுவது தொடா்பாக என்ஜிடி முன்னா் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தக் கோரி தில்லி குடியிருப்புவாசி வருண் என்பவா் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாயம் விசாரித்தது. அந்த மனு மீது தீா்ப்பாயம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.