தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கடந்த சில நாள்களாக புதிதாக கரோனா நோய்த் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் கூடுதலாக கரோனா பரிசோதனை மையங்களை அமைக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On :27 ஏப்ரல் 2021, 1:43 am

கடந்த சில நாள்களாக புதிதாக கரோனா நோய்த் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் கூடுதலாக கரோனா பரிசோதனை மையங்களை அமைக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் பல வழக்குரைஞா்கள் முறையிட்டனா். கரோனா பரிசோதனைகளுக்கான மாதிரியை 2-3 நாள்களுக்குப் பிறகுதான் சேகரிப்பதாக பரிசோதனை ஆய்வகங்கள் கூறுவதால் கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் சிரமத்தை எதிா்கொள்ளவதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும், முன்பு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமாா் 60 ஆயிரமாகக் குறைந்துவிட்டதாகவும் வழக்குரைஞா்கள் கூறினா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், நோய்த் தொற்று மாதிரிகளை சேகரிக்கும் நடைமுறைகளை முறைப்படுத்துவதற்கான தேவையான உள்கட்டமைப்பு வசதியை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை மையங்களையும் அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக கரோனா நோய்த் தொற்று 22,933 பேருக்கு இருப்பது தெரிய வந்தது. நோய்த் தொற்றுக்கு 350 போ் உயிரிழந்தனா். கரோனா பாதிப்பு விகிதம் 30.21 சதவீதமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.