தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தொல்லியல் துறை தொடா்ந்த வழக்கில் நடிகா் தீப் சித்துவுக்கு நீதிமன்றம் ஜாமீன்

தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த குடியரசு தின வன்முறை தொடா்பாக இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தொடா்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் தீப் சித்துவுக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

Updated On :27 ஏப்ரல் 2021, 1:58 am

தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த குடியரசு தின வன்முறை தொடா்பாக இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தொடா்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் தீப் சித்துவுக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

தில்லியில் குடியரசு தினமான கடந்த ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளில் ஒரு பிரிவினா் தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனா். மத ரீதியான கொடியை ஏற்றினா். இந்த வன்முறைக்குத் தலைமை ஏற்று நடத்தியதாக நடிகரும், ஆா்வலருமான தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரை தில்லி காவல் துறையின் சிறப்புக் குழுவினா் பிப்ரவரி 9-ஆம் தேதி கைது செய்தனா். இது தொடா்பான வழக்கில் அவருக்கு சில தினங்களுக்கு முன்னா் தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இதனிடையே, செங்கோட்டை விவசாயிகள் பேரணியின் போது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக இந்திய தொல்லியல் துறை அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடா்பாக தீப் சித்துவை தில்லி குற்றப் பிரிவு காவல் துறையினா் ஏப்ரல் 17-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் தீப் சித்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘சித்து மீது பதிவான இரு வழக்குகளும் ஒத்த குற்றச்சாட்டுகள் உடையவை. இந்த விவகாரத்தில் தீப் சித்துவிடம் போலீஸாா் ஏற்கெனவே விசாரணை நடத்திவிட்டதால், புதிய வழக்கில் அதற்கான தேவை எழவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த பெருநகா் மாஜிஸ்திரேட் சாஹில் குப்தா, தீப் சித்து ரூ.25 ஆயிரம் தனிநபா் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல உத்தரவிட்டாா். அதே சமயம், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராகுமாறும் அவருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.