தில்லியில் கரோனா விதிமீறல்: ஒரே நாளில் 1,225 பேருக்கு அபராதம் விதிப்பு

தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லி காவல்துறை அளித்த தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 1,225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணியாத 1,100, சமூக இடைவெளியை பின்பற்றாத 76, பொது இடங்களில் எச்சில் துப்பிய 8 மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 41 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த ஏப்ரல் 19 முதல் ஆகஸ்ட் 29 வரையிலான காலகட்டத்தில் முகக்கவசம் அணியாத 2,38,721 பேருக்கு தில்லி காவல்துறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாத 28,734, பொது இடங்களில் எச்சில் துப்பிய 1,482, விதிமுறையை மீறி கூட்டம் கூடியதற்கு 1,463    மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 1,509 பேரிடம் என மொத்தம் 2,71,909 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com