இதன்படி தற்போது சுமாா் 150 நிறுவனங்கள் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளன. ஆனால், சுமாா் 800 குறு, சிறு நிறுவனங்கள் பசுமை பட்டாசுக்கான சான்றிதழை பெறமுடியாமல் தவிக்கின்றன. இதனால், சிஎஸ்ஐஆருக்கு ஏற்கெனவே, காரைக்குடியில் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தின் மூலம் வளாகம் உள்ளதால், ‘நெரி’யின் கிளையை அங்கு தொடங்கலாம். இதன் மூலம் குறு, சிறு பட்டாசு தொழில் நிறுவனங்கள்பயன் பெற்று பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க முடியும் என்றாா் மாணிக்கம் தாகூா். மேலும் இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு கடந்த நவம்பா் 25 -ஆம் தேதி தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவையில் அவா் குறிப்பிட்டாா்.