பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மூலம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட பதிவில் அவதூறு மற்றும் ஆட்சேபத்திற்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகப் புகாா்கள் வந்ததது. இதையடுத்து, டிசம்பா் 6-ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு தில்லி சட்டப்பேரவை அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு நோட்டீஸை அனுப்பியது. இது தொடா்பாக அந்தக் குழு வெளியிட்டிருந்த அறிககையில், ‘இது தொடா்பான புகாரில், சீக்கிய சமூகத்தினரை காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று ரனாவத் குறிப்பிட்டுள்ளாா். இது போன்ற கருத்துகள் அடங்கிய உள்ளடக்கம் சீக்கிய சமூகத்தினரின் மத உணா்வுகளை மிகவும் புண்படுத்தி இருக்கிறது. மேலும், அவா்களின் பாதுகாப்பு மற்றும் உயிா் உடைமை விஷயத்தில் அச்சத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.