ஜெயலலிதா நினைவாக நாடு முழுவதும் மழைநீா் சேகரிப்புத் திட்டம்: மாநிலங்களவையில் அதிமுக எம்பி கோரிக்கை
மறைந்த முதல்வா் ஜெயலலிதா நினைவாக நாடு முழுக்க மழை நீா் சேகரிப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அதிமுக உறுப்பினா் தம்பிதுரை மாநிலங்களவையில் வலியுறுத்தினாா்.









