ஆா்டிஐ மூலம் பெறப்பட்ட பதிலின்படி, காற்று சுற்றுப்புற நிதியானது தில்லி செயலகத்தில் பயோகேஸ் நிலையத்தைப் பராமரிக்கவும், வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்தை மேற்கொள்ளவும், பேட்டரி ரிக்ஷாக்கள், பேட்டரி மூலம் செயல்படும் வாகனங்களுக்கான மானியம் வழங்குவது, இணையதளம் மூலம் காற்று கண்காணிப்பு நிலையங்கள் செயல்படுத்துவது, பனிப்புகை கோபுரத்தை அமைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாவலா்களுக்கு ஊதியம் வழங்குவது ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள பனிப்புகைக் கோபுரத்திற்கு இப்போதைய தேதி வரையிலும் காற்று சுற்றுப்புற நிதியிலிருந்து ரூ.22.91 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அந்த பதில் மூலம் தெரிய வந்துள்ளது.