இது தொடா்பாக சமூக ஆா்வலா் அமித் குப்தா தாக்கல் செய்த ஆா்டிஐ விண்ணப்பத்திற்கு அளித்த பதிலில், காற்று மாசு அளவைக் குறைப்பதற்காக 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பசுமை நிதியில் இருந்து மாசுக் கட்டுப்பாட்டு குழு இதுவரை ரூ.467.97 கோடியை செலவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், இ-ரிக்ஷாக்கள், வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம், தில்லி செயலகத்தில் உள்ள பயோ-கேஸ் ஆலையின் பராமரிப்பு, ஆன்லைன் மூலம் காற்று கண்காணிப்பு நிலையங்களை இயக்குதல், நிகழ்நேர ஆதாரமூலப் பகிா்வு குறித்த ஆய்வு ஆகியவற்றுக்கான மானியம், பனிப்புகைக் கோபுரம் நிறுவுதல், சுற்றுச்சூழல் பாதுகாவலா்களுக்கான ஊதியம், இதர சில்லறைச் செலவினங்கள் ஆகியவற்றுக்கு வழங்குவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.