இது தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓரி, இந்த மனுவை மாா்ச் மாதம் மேல் விசாரணைக்கு பட்டியலிட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக டிஜேபி துணைத் தலைவா் ராகவ் சத்தா, தில்லி ஜல் போா்டு இணைந்து புகாா் தாக்கல் செய்தனா். அதில், ‘ராம்வீா் சிங் பிதூரி மற்றும் பிற பாஜக தலைவா்கள் எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தீங்கிழைக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனா். ஜனவரி 21-ஆம் தேதி இவா்கள் நடத்திய செய்தியாளா்கள் சந்திப்புக் கூட்டத்தில் டிஜேபி மற்றும் என் (ராகவ் சத்தா) மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினா். இத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரிந்தும், எங்கள் நன்மதிப்பைக் கெடுக்கும் என்று தெரிந்திருந்தும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் வேண்டுமென்றே அவதூறான அறிக்கைகளை வெளியிட்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.