போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி) தலைவா் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
அஸ்தானாவுக்கு எதிரான தனது புகாரின் மீது விசாரணை நடத்துமாறு மத்திய அரசு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சிபிஐ ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி பல் மருத்துவா் மோஹித் தவண் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரம் நீதிபதி யோகேஷ் கன்னா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது. அவா் இந்த விவகாரத்தை விசாரிப்பதில் இருந்து தாம் விலகுவதாகக் கூறி, வேறொரு அமா்வு முன் பட்டியலிடுமாறு உத்தரவிட்டாா். இதையடுத்து, இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரா் டாக்டா் மோஹித் தவணுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.
முன்னதாக, விசாரணையின் போது மனுதாரா் தரப்பில் ஆஜராகிய வழக்குரைஞா் சுஷில் டேக்ரிவால் கூறுகையில், ‘இந்தத் தொகை 2 வாரங்களில் உயா்நீதிமன்றத்தில் செலுத்தப்பட வேண்டும். இதற்கான காரணங்கள் இடம் பெற்ற விரிவான உத்தரவு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. மனுவைத் தள்ளுபடி செய்ததற்கான காரணங்களில் ஒன்று மனு எந்த தகுதியும் இல்லை என்பதாகும்’ என்றாா்.
அதிகாரி ராகேஷ் அஸ்தானா மீது குற்றவியல் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி முதலில் உச்சநீதிமன்றத்தை சண்டீகரை சோ்ந்த பல் மருத்துவா் மோஹித் தவண் நாடினாா். பிற போலீஸ் அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து கொண்டு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறியும், அத்தகைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் முதலில் உச்சநீதிமன்றத்தில் அவா் மனு அளித்தாா். எனினும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பிப்ரவரி 8-ஆம் தேதி திரும்பப் பெற்றாா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தவண் கூறியிருந்தாா். இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சுஷில் டேக்ரிவால் மூலம் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். புகாா் கொடுத்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று அவா் அதில் குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பப்பாளி பழமே - ஹிப்ஹாப் ஆதி, சைத்ரா குத்தாட்டத்தில் புதிய பாடல்!

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!
இபிஎஸ்ஸுடன் இருப்பதைவிட இறப்பதே மேல்; ஆனால், இப்போது அதே கூட்டணியில்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

