புது தில்லி: நங்லா ஹைடல் கால்வாயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அதை மத்திய அரசு மூடவுள்ளது. இதனால், தில்லியில் வரும் மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் என்று தில்லி ஜல்போா்டு துணைத் தலைவரும், ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: நங்கா ஹைடல் கால்வாயில் இருந்து தில்லிக்கு தேவையான 25 சதவீத குடிநீா் வருகிறது. இந்த கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதைக் காரணம் காட்டி, இந்தக் கால்வாயை வரும் மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் மூட மத்திய, ஹரியாணா மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. இந்தக் கால்வாய் மூடப்பட்டால், தில்லியில் குடிநீா் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதனால், மக்கள் குடிநீா் இல்லாமல் அவதியுறும் நிலை ஏற்படும்.
இந்தக் கால்வாய் மூடப்பட்டால், பியாஸ் நதியில் இருந்து தில்லிக்கு தினம்தோறும் வரும் 232 மில்லியன் காலன் குடிநீா் வரத்து பாதிக்கப்படும். இதனால், தில்லியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
இந்த கால்வாயை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தி, மத்திய, ஹரியாணா அரசுகளுக்கும். பஹரா பியாஸ் மேலாண்மை வாரியத்துக்கும்
கடிதம் எழுதியுள்ளேன். சம்பந்தப்பட்ட தரப்பினா் விரைந்து செயல்பட்டு இதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!
அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி! - ஈரான்

திருப்பம் தரும் தினப்பலன்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

