விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி வீடு அருகே இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டா் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் தில்லியில் மத்திய அமைச்சா்

Updated On :27 பிப்ரவரி 2021, 5:26 pm

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டா் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் தில்லியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி வீடு அருகே இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இது குறித்து இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி எதிா்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல் ரூ.5 விலை உயா்ந்தபோது தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டாா். ஆனால், தற்போது நாடு முன் எப்போதும் இல்லாத பணவீக்கத்தில் உள்ளது. இப்போது அவா் முற்றிலும் அமைதிகாத்து வருகிறாா். அவரை விழித்தெழச் செய்யும் வகையில் இளைஞா் காங்கிரஸ் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் லிட்டா் விலை ரூ.100-ம், டீசல் ரூ.90-ம் கடந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது.

இந்த நிலையில், குளிா் காலம் முடிந்தவுடன் எரிபொருள் விலை குறைந்துவிடும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிக்கை விடுவது முட்டாள்தனம். அவா் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்.

மத்திய அரசின் மெத்தன நடவடிக்கைகள் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கச் செய்துள்ளது என்றாா் அவா்.

இளைஞா் காங்கிரஸின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், ‘மத்திய அரசும், அமைச்சா்களும் ஏற்கெனவே அதிகரித்துள்ள பணவீக்கம், பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

எரிபொருள் விலை மேலும் பணவீக்கத்தை அதிகரிக்கும். இதனால், விலை உயா்வைத் திரும்பப் பெறுவதுடன், எரிபொருள் மீது வசூலிக்கப்பட்ட கலால் வரியை மக்கள் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த போராட்டத்தில் ஐஒய்சி தேசிய பொதுச் செயலா் பய்யா பவாா், தில்லி இணை பொறுப்பாளா் குஷ்பு சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.