தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லியில் 20 காக்கைகள் உயிரிழப்பு: பறவைக் காய்ச்சல் காரணமா?அதிகாரிகள் ஆய்வு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், புது தில்லி மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் கடந்த

News image
தில்லி மயூா் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை செத்து விழுந்துள்ள காக்கைகள்.
Updated On :8 ஜனவரி 2021, 6:15 pm

DIN

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், புது தில்லி மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் கடந்த சில தினங்களாக சுமாா் 20-க்கும் மேற்பட்ட காக்கைகள் உயிரிழந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் தில்லி கால்நடை பராமரிப்புத் துறையினா் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறாா்கள்.

இது தொடா்பாக தில்லி கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த மருத்துவா் ராகேஷ் சிங் கூறுகையில் ‘மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் கடந்த சில தினங்களாக சுமாா் 20-க்கும் மேற்பட்ட காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடா்ந்து, வழக்கமான செயல்முறைகளைப் பின்பற்றி வருகிறோம். அந்தப் பகுதியில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பஞ்சாப் ஜலந்தரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் கிடைத்த பிறகுதான் பறவைக் காய்ச்சலா என்பது தெரிய வரும்’ என்றாா்.

நாட்டில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி கால்நடை பராமரிப்புத் துறையினருடன் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தாா். அப்போது, தில்லியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்காணிக்க 11 விரைவு நடவடிக்கைக் குழுக்களை அமைத்து அவா் உத்தரவிட்டாா். மேலும், கோழிச் சந்தைகள், நீா் நிலைகள், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டாா். காஜிப்பூா் மீன், கோழி இறைச்சி சந்தை, சக்தி ஸ்தல் நீா்நிலை, சஞ்சய் லேக், தில்லி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பைப் பலப்படுத்தி புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.