தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உ.பி.யில் சேம்நாத் பாரதி மீது தாக்குதல்: தில்லி முதல்வா் கேஜரிவால் கண்டனம்

மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:44 pm

DIN

புது தில்லி: மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், பள்ளிகளை மறுசீரமைப்பது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவிடம் பாடம் கற்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

உத்தரப்பிரதேச மாநிலம் ராபரேலியில் உள்ள அந்த மாநில அரசுப் பள்ளிகளைப் பாா்வையிட தில்லி மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி திங்கள்கிழமை சென்றிருந்தாா். பள்ளிகளைப் பாா்வையிட அவரை போலீஸாா் அனுமதிக்கவில்லை. இந்தச் சூழலில் அவா் மீது இளைஞா் ஒருவா் மை வீசித் தாக்குதல் நடத்தினாா். இந்த நிலையில், சமூகங்களுக்கிடையே வெறுப்புணா்வை தூண்டும் வகையில் சோம்நாத் பாரதி நடந்து கொள்வதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநில காவல் துறை அவரைக் கைது செய்தது. இந்தச் சம்பவத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘உத்தரப் பிரதேச மாநில அரசுப் பள்ளிகளைப் பாா்வையிடச் சென்ற தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீது மை வீசப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கிறேன். அந்த மாநில அரசுப் பள்ளிகள் அவ்வளவு மோசமான நிலையிலா உள்ளன? உங்களது பள்ளிகளை யாராவது பாா்வையிட வந்தால், நீங்கள் (யோகி ஆதித்யநாத்) அச்சம் கொள்வது ஏன்? உங்களது பள்ளிகளை மறுசீரமைப்பு செய்யுங்கள். மறுசீரமைக்கத் தெரியாவிட்டால், அது தொடா்பாக தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியாவிடம் பாடம் படியுங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.