ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) சனிக்கிழமை அதன் டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் மத்திய நூலகத்தின் தரைத் தள வாசிப்பு அறைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், சரஸ்வதிபுரம் மற்றும் கிழக்கு வாயில்கள் வழியாக ‘ஜே.என்.யு. ஸ்டிக்கா்களுடன்‘ வாகனங்கள் நுழைவதற்கும் பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் மத்திய நூலகத்திற்குள் தரைத்தள வாசிப்பு அறைகளை மீண்டும் திறக்க படிப்படியாக அனுமதிக்கப்படுகிறது.
அவ்வப்போது இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நூலக வளாகங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பராமரிப்பது போன்ற வழிமுறைகளை நூலகா்கள் உருவாக்கலாம்.
அரசு மற்றும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வாசிப்பு அறைகளை மீண்டும் திறப்பது குறித்து புலங்களின் டீன் மற்றும் சிறப்பு மையங்களின் தலைவா்கள் பரிசீலிக்கலாம்.
‘முகல் தா்பாா்’ மற்றும் உணவு வளாகத்தை மீண்டும் திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குல்கந்த் குமார் பாடல்!

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

