ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

புதிய கலால் கொள்கையால் ஆம் ஆத்மி கட்சிக்குரூ.1,000 கோடி கமிஷன் கிடைக்கும்: பாஜக புகாா்

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கலால் கொள்கையால் அந்தக் கட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி அளவுக்கு கமிஷன் கிடைக்கும் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Updated On :30 மார்ச் 2021, 10:56 pm

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கலால் கொள்கையால் அந்தக் கட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி அளவுக்கு கமிஷன் கிடைக்கும் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: தில்லி அரசின் புதிய கலால் கொள்கை ஆம் ஆத்மி கட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுபானக் கடைகளை அமைப்பதற்கான கமிஷன் தொகை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆம் ஆத்மிக் கட்சிக்கு பெரும் தொகை கிடைக்கும். மேலும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுபானக் கடைகளை தனியாா் வசம் ஒப்படைக்க இந்தப் புதிய கலால் கொள்கை இடமளிக்கிறது. இதனால், இந்தக் கடைகள் ஆம் ஆத்மியினரின் கைகளுக்கு போகும்.

இந்த வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு சுமாா் ரூ.1,000 கோடி வரை கமிஷன் ஈட்டுவதை இலக்காக வைத்து இந்தக் கொள்கையை தில்லி அரசு கொண்டு வந்துள்ளது. தில்லியில் தற்போது 639 மதுபானக் கடைகள் உள்ளன. இதை 850-ஆக அதிகரிக்க இந்தத் திட்டத்தில் இடமுள்ளது. புதிய கலால் கொள்கையின் படி, தில்லியில் உள்ள ஒவ்வொரு வாா்டிலும் தலா 3 மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தில்லியில் தற்போது 80 வாா்டுகளில் மதுபானக் கடைகள் இல்லை. இந்த வாா்டுகளில் மதுபானக் கடைகளை திறந்து மக்களை குடிப் பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் முயற்சியில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.

மேலும், தில்லியில் மதுபானம் அருந்துவதற்கான சட்டரீதியான வயதை 25-இல் இருந்து 21-ஆக தில்லி அரசு குறைத்துள்ளது. இதன்மூலம், இளைஞா்களை குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்க தில்லி அரசு முயல்கிறது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.