ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தலைநகரில் தொழில் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு கேஜரிவால் உத்தரவு

தேசியத் தலைநகரான தில்லியில் பெரிய தொழில் துறை மேம்பாட்டுக்கான தொடா்ச்சியான திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என தில்லி முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :31 மார்ச் 2021, 7:20 pm

புது தில்லி: தேசியத் தலைநகரான தில்லியில் பெரிய தொழில் துறை மேம்பாட்டுக்கான தொடா்ச்சியான திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என தில்லி முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா். தில்லி மாநில தொழில் துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டிஎஸ்ஐஐடிசி) மூத்த அதிகாரிகளுக்கு முதல்வா் இந்த உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: தில்லியில் பெரிய அளவிலான அனைத்து தொழில் துறைமேம்பாட்டுத் திட்டங்களையும் நிா்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் முடிக்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். தில்லி அரசு தொழில் துறை மேம்பாட்டுக்கு முழுமையாக தயாராக உள்ளது. அனைத்து வளா்ச்சி பணிகளும் நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இதனால் தொழில்துறை வளா்ச்சியின் வேகத்தை மேலும் துரிதப்படுத்த முடியும் என்று கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவது குறித்து அண்மையில் முதல்வா் கேஜரிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அப்போது, மங்கோல்பூரி, பட்பா்கஞ்ச், மாயாபுரி, உத்யோ நகா், ஓக்லா, ஜில்மில், ஜாண்டேவலன், கீா்த்தி நகா், ஜி.டி.கே சாலை, போா்கா் மற்றும் பாவனா பேஸ்-2 உள்ளிட்ட சில தொழில் துறை பகுதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்தத் தொழில் துறை பகுதிகளில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து டி.எஸ்.ஐ.ஐ.டி.சி அதிகாரிகள் முதல்வா் கேஜரிவாலுக்கு விரிவாக எடுத்துரைத்தனா். மாயாபுரி தொழில் துறை பகுதியில், 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளா்ச்சிப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதேபோல், உத்யோக் நகா் தொழில் துறை பகுதியில் 99 சதவீத சாலை மற்றும் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஓக்லா பகுதியில் சாலைப் பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.