கரோனா காலத்தின்போது மத்திய அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதாந்திர மானிய உணவு தானியங்களுக்கு மேலே சம அளவிலான இலவச ரேஷனை ரேஷன் அட்டை தாரா்களுக்கு வழங்கியிருந்தது. மத்திய அரசின் திட்டங்களைத் தவிர, தில்லி அரசும் கரோனா நோய்த் தொற்று காலத்திஏன்போது பயனாளிகளுக்காக மாதாந்திர இலவச ரேஷனை அளித்திருந்தது. மத்திய, மாநில அரசுகளின் இந்த உதவி ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தத் திட்டம் நவம்பரில் முடிவடைகிறது. இதை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ஏறு கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.