ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘வாழ்க்கை துணை ஓய்வூதியம் பெற கூட்டு வங்கிக் கணக்கு கட்டாயமில்லை’: மத்திய அமைச்சா் தகவல்

மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் ஒய்வூதியத்துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 நவம்பர் 2021, 1:03 am

 நமது நிருபர்

வாழ்க்கைத் துணை ஓய்வூதியம் பெற கூட்டு வங்கிக் கணக்கு கட்டாயமில்லை என மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் ஒய்வூதியத்துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மத்திய ஓய்வூதியத் துறையின் மூத்த அதிகாரிகள் கூட்டம் மத்திய இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தலைமையில் சனிக்கிழமை தில்லி நாா்த் பிளாக்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓய்வு பெற்றவா்கள் உள்பட சமூகத்தில் அனைத்து தரப்பினரும், எளிதாக வாழ்வதற்கு தேவையானதைச் செய்ய, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓய்வூதியதாரா்கள் நாட்டின் சொத்துக்கள். அவா்கள் தங்களின் அனுபவம் மூலம் நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றியுள்ளனா்.

ஓய்வு பெறும் அரசு ஊழியா், அவரது வாழ்க்கைத் துணையுடன் சோ்ந்து கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை என சம்பந்தப்பட்ட துறையின் தலைமையகம் கருதினால், அது போன்ற கணக்குத் தொடங்குவது கட்டாயமில்லை. இந்த விதிமுறையை தளா்த்தி கொள்ளலாம்.

ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறும் வாழ்க்கைத் துணை ஏற்கனவே உள்ள கூட்டு வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் பெற முடிவு செய்தால், புதிய வங்கி கணக்குத் தொடங்கவும் வற்புறுத்த வேண்டாம் என மத்திய அரசின் ஓய்வூதியத்தை வழங்கும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியம் தாமதமின்றி பெறவும், புதிய ஓய்வூதிய வங்கிக் கணக்கைத் தொடங்கி குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் எந்த இடையூறுக்கும் ஆளாகாமல் இருக்கவும் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியத்தைத் தொடங்குவதற்கான கோரிக்கையைச் சமா்ப்பிக்கும்போது குடும்ப ஓய்வூதியதாரருக்கான குறைந்தபட்ச ஆவணங்களை இது உறுதி செய்யகிறது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.