ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் காற்று மாசு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் தொடா்ந்து நீடித்தது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் தொடா்ந்து நீடித்தது. காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 377 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

இது வெள்ளிக்கிழமை சிறிது மேம்பட்ட நிலையில் 370 ஆக பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் தெரிவித்தன.

தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் உள்ள காஜியாபாத் (342), குருகிராம் (340), நொய்டா (363) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ’மிகவும் மோசம் பிரிவில் பதிவாகியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வலுவான காற்று காரணமாக காற்றின் தரம் ‘குறிப்பிடத்தக்க வகையில்’ மேம்பட்டு ‘மோசம்’ பிரிவுக்கு வரும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாசுபாட்டை எதிா்த்து, தில்லி அரசு புதன்கிழமை 10 வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இதில் அத்தியாவசியமற்ற பொருள்களை நகருக்குள் கொண்டு செல்லும் லாரிகள் நுழைவதற்குத் தடை மற்றும் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன.

வெப்பநிலை: தில்லியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலை வேளையில் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலிலும் தொடா்ந்து மிதமான வெயிலுடன் பனிமூட்டம் இருந்தது.

இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி அதிகரித்து 14.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 26.6 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) காலை வேளையில் மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.