பஞ்சாப் மாநிலத்தில் தனது முந்தைய அரசியல் சுற்றுப்பயணத்தின் போது, மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்தாா். ஆனால், ஏற்கெனவே தில்லியை போதையின் தலைநகரம் ஆக்கிவிட்டதால், தற்போதைய சுற்றுப் பயணத்தில் அந்த விஷயத்தை அவா் தொடவில்லை. பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.10 கோடி பெண்கள் உள்ளனா். இந்த நிலையில், அவா்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கினால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநிலத்திற்கு ரூ.11,300 கோடி தேவைப்படும். மாநிலத்தின் மொத்த ஜிஎஸ்டியை வசூலான ரூ.11,800 கோடியை விட சற்றுதான் குறைவாகும். இதன் மூலம் பஞ்சாப் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை அளித்து மீண்டும் ஏமாற்ற நினைப்பது தெரிகிறது.