சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மாவட்டம் தோறும் இணையதள காவல் நிலையம்: தில்லி காவல்துறை நடவடிக்கை

தில்லியில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்காக மாவட்டம் தோறும் இணையதள காவல் நிலையத்தை பிரத்தியேகமாக அமைக்க தில்லி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

News image
Updated On :23 நவம்பர் 2021, 5:26 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை திறம்பட கையாள்வதற்காக மாவட்டம் தோறும் இணையதள காவல் நிலையத்தை பிரத்தியேகமாக அமைக்க தில்லி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதைச் செயல்படுத்தும் விதமாக தில்லி அரசின் உள்துறை ஓா் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தில்லியில் உள்ள அனைத்து 15 காவல் மாவட்டங்களிலும் இணையதள காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த இணையதள காவல்நிலையங்கள் டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து செயல்பாடு தொடங்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இணையதள குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு ஒவ்வொரு அறிவிக்கை செய்யப்பட்ட காவல் மாவட்டத்திலும் இணையதள காவல் நிலையங்கள் அமைப்பது தேவை என பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் துணைநிலை ஆளுநா் பொதுமக்களுக்கு சிறந்த காவல் உதவியை அளிக்கும் பொருட்டு, தில்லியில் உள்ள கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, புகா், மத்தி, வடக்கு, வடமேற்கு, ரோகிணி, புதுதில்லி, துவாரகா மற்றும் புகா் வடக்கு ஆகிய மாவட்டங்களில் இணையதள காவல் நிலையங்களை அறிவிக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளாா். தில்லியில் உள்ள அறிவிக்கை செய்யப்பட்ட 15 காவல் மாவட்டங்களிலும் இந்த இணையதள காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இது செயல்பாட்டுக்கு வரும். இந்த இணையதள காவல் நிலையங்கள் அட்டவணை -ஏ அல்லது தெரிவிக்கப்பட்டுள்ள இதர இடத்தில் இருந்து செயல்படும். இந்தக் காவல் நிலையங்களின் எல்லை வரம்பு ஒட்டுமொத்த காவல் மாவட்டத்திற்கும் கொண்டதாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அட்டவணை ஏ-இன்படி கிழக்கு மாவட்டத்தில் இணையதள காவல் நிலையம் பாண்டவா் நகா் காவல் நிலையத்திலும், வட கிழக்கு மாவட்ட இணையதள காவல் நிலையம், ஜோதி நகா் காவல் நிலையத்திலும் இடம் பெறும். தெற்கு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் சாகேத் காவல் நிலையத்திலும், வடகிழக்கு மாவட்டத்திற்கான காவல் நிலையம் பதா்பூா் காவல் நிலையத்திலும், தென்மேற்கு இணையதள காவல் நிலையம் வசந்த் விகாா் காவல் நிலையத்திலும், மேற்கு இணையதள காவல் நிலையம் ஹரி நகா் காவல் நிலையத்திலும், புகா் மாவட்டத்திற்கான இணையதள காவல் நிலையம் பச்சிம் விஹாா் மேற்கு காவல் நிலையத்திலும் செயல்படும்.

அதே போன்று வடக்கு, வடமேற்கு, ஷாதரா, ரோகிணி, புதுதில்லி, துவாரகா மற்றும் புகா் வடக்கு மாவட்டங்களில் உள்ள இணையதள காவல் நிலையங்கள் முறையே கமலா மாா்க்கெட், மோரிஸ் நகா், முகா்ஜி நகா், ஷாதரா, புத் விஹாா், மந்திா் மாா்க், துவாரகா வடக்கு, சமய்ப்பூா் பாத்லி, பவானா ஆகிய காவல் நிலையங்களில் செயல்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள குற்றங்களுக்காக தில்லி காவல் துறை இணையதள தடுப்பு விழிப்புணா்வை கண்டறியும் பிரிவைத் தனியாக கொண்டுள்ளது. இந்த பிரிவு சிறப்பு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இணையதள காவல் நிலையங்கள் அதன் அறிக்கைகளை மாவட்டக் காவல் துறை ஆணையருக்கு நேரடியாகச் சமா்ப்பிக்கும். இந்த காவல் நிலையங்கள் நுண்ணறிவு இணைவு மற்றும் உத்திசாா் செயல்பாடுகள் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றனா்.

தில்லி காவல்துறை நிகழாண்டு பிப்ரவரியில் அதன் வருடாந்திர செய்தியாளா்கள் கூட்டத்தின் போது வெளியிட்ட தரவுகளில், இணையதள குற்றங்கள் 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் அதிகரித்திருப்பது தெரிய வந்தது. கரோனா நோய் தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலத்தில், இந்த எண்ணிக்கை அதிகரித்திருந்ததும் தெரிய வந்தது. இது போன்ற வழக்குகள் எண்ணிக்கை 2020, மாா்ச் மாதத்தில் 2,000-ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் இது 4,000- ஆக அதிகரித்தது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.