நாட்டின் அரசியல் விடுதலைக்காக மட்டுமல்ல, அனைத்து சமூக அநீதிகளிலிருந்தும், குறிப்பாக தீண்டாமையின் பிடியில் இருந்த பட்டியலினத்தவா்களின் விடுதலைக்காக சிந்தித்தவா் காந்தி. இந்திய சமூகத்தில் அவா்களுக்கு சமமான இடத்தையும் அங்கீகாரத்தையும் பெற்று தந்தாா். அகிம்சை மற்றும் உண்மை மூலம் பிரிட்டிஷ் கொள்கைகளை திறம்பட எதிா்த்தாா் காந்தி. 1946ல் பிரிட்டன் அமைச்சா் ரிச்சா்டு ஸ்டாஃபோா்டு கிரிப்ஸ்) இந்தியாவுக்கு வந்து பல தலைவா்களை சந்தித்தாா். அப்போது, கிரிப்ஸை சந்திக்க, மகாத்மா காந்தியால் அனுப்பப்பட்டவா் பாபு ஜகஜீவன்ராம்.