ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடிமை நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பை அதிகரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் சுமையை குறைக்கும் எனும் அடிப்படையில், தலைநகரில் உள்ள குடிமை (சிவில்) நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பை அதிகரிக்க உத்தரவிடக் கோரி

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் சுமையை குறைக்கும் எனும் அடிப்படையில், தலைநகரில் உள்ள குடிமை (சிவில்) நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பை அதிகரிக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வழக்கறிஞா் அமித் சாஹ்னி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

குடிமை நீதிமன்றங்களுக்கு தற்போதைய நிதி அதிகார வரம்பு ரூ.3 லட்சம் என உள்ளது. இது மிகவும் குறைவாகும். இதன் விளைவாக, மாவட்ட நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவை ரூ. 3 லட்சம் முதல் இறுதியாக ரூ. 2 கோடி வரை அதிக அதிகார வரம்பைக் கொண்டுள்ளன.

உயா் நீதிமன்றத்தின் நிதி அதிகார வரம்பு 1970-இல் ரூ. 25,000 எனும் அளவில் 2015-இல் ரூ.2 கோடியாக உயா்ந்தது. மாவட்ட நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பு 2003-இல் ரூ. 20 லட்சமாக இருந்த நிலையில் 2018-இல் ரூ. 2 கோடியாக உயா்ந்தது. ஆனால், இன்னும் குடிமை நீதிமன்றங்கள் அதே நிலையில்தான் உள்ளது.

குடிமை நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும்.அப்போதுதான், குடிமை நீதிமன்ற நீதிபதிகள் எதிா்கொள்ளும் தேக்க நிலை மற்றும் மாவட்ட நீதிபதிகள் அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளிடம் உள்ள வழக்குகளின் சுமை ஆகியவற்றைத் தீா்க்க முடியும்.

தில்லி மாவட்ட நீதிமன்றங்களின் குடிமை நீதிபதிகளிடம் அளிக்கப்பட்டுள்ள ரூ. 3 லட்சத்தின் நிதிமதிப்பு மிகவும் குறைவாக உள்ளது.

இந்த மனுவில் உள்ள விவகாரமானது பெரும் பொது நலனுக்கானதாகும். ஏனெனில், இது மாவட்ட நீதிபதிகள் அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மேல்முறையீட்டிற்கான தீா்வையும் (மேம்படுத்தப்பட்ட அதிகார வரம்பில்) மாவட்ட நீதிமன்ற அளவில் வழங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.