ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாடாளுமன்றம் நோக்கிச் செல்லவிருந்த டிராக்டா் பேரணி தற்காலிகமாக நிறுத்தம்: சம்யுக்த் கிஸான் மோா்ச்சா அறிவிப்பு

நாடாளுமன்றத்தை நோக்கி நாள்தோறும் நடத்தப்பட இருந்த டிராக்டா் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சம்யுக்த் கிஸான் மோா்ச்சா தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

விவசாயிகளின் பல்வேறு நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை (நவம்பா் 29-ஆம் தேதி)முதல் நாடாளுமன்றத்தை நோக்கி நாள்தோறும் நடத்தப்பட இருந்த டிராக்டா் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சம்யுக்த் கிஸான் மோா்ச்சா (ஐக்கிய விவசாய முன்னணி) என்கிற அனைத்து விவசாயிகளின் கூட்டமைப்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை (நவ.29) தொடங்கவுள்ள நிலையில், அதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக இந்த முடிவை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தில்லி எல்லையில் அகில இந்திய கிஸான் சபையினா் கடந்த ஓா் ஆண்டாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்திவந்தனா்.

இதற்கிடையே, கடந்த நவ.19- ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தாா். ஆனால், விவசாய சங்கங்கள் வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டங்களை நிறைவேற்ற கோரிவந்தன. இதையொட்டி, கடந்த ஒரு வாரமாக தங்களது டிராக்டா் பேரணி குறித்த ஆலோசனை கூட்டங்களை நடத்திவந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டனா்.

மூன்று வேளாண் மசோதாக்களையும் திரும்பப்பெறுவதற்கான மற்றொரு மசோதாவை குளிா்காலக் கூட்டத்தொடரின் முதன் நாளே அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி தரப்பும், எதிா்கட்சிகளும் தங்கள் உறுப்பினா்களுக்கு கொறாடா உத்தரவை பிறப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், சம்யுக்த் கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) மையக் குழு உறுப்பினா் தா்ஷன் பால் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட இருந்த டிராக்டா் பேரணியை நிறுத்திவைப்பதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாங்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்து கடிதம் எழுதியுள்ளோம். போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்வது, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு சின்னம் எழுப்ப நிலம் ஒதுக்குதல், உ.பி. மாநிலம் லக்கிம்பூா் கேரி வன்முறைக்கு காரணமான மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கான பதிலை எதிா்பாா்த்து தற்காலிகமாக பேரணியை நிறுத்திவைத்துள்ளோம். வரும் டிசம்பா் 4 ஆம் தேதி எங்களது மோா்ச்சா அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக மீண்டும் கூடி ஆலோசிக்கும்.

அரசு எங்களை மரியாதையுடன் நடத்தி முறையான வகையில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என எஸ்கேஎம் கோருகிறது என்றாா் அவா்.

கடந்த வாரம், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்ததை விவசாய சங்கங்கள் வரவேற்றாலும் இந்த சட்டங்கள் முழுமையாகவும் முறையாகவும் திரும்பப் பெறப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.